இளம்பெண்களை வைத்து விபச்சாரம்;தாய், காவலர் உள்ளிட்ட 3 பேர் கைது 

by Editor / 09-09-2022 08:47:34pm
இளம்பெண்களை வைத்து விபச்சாரம்;தாய், காவலர் உள்ளிட்ட 3 பேர் கைது 

மதுரை நகரில் உள்ள கே.புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம்நடந்து  வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்  அடிப்படையில் அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த  கண்மணி   (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரும் பிடிப்பட்டார். அந்த பெண் மீது ஏற்கனவே பல விபச்சார வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்  வறுமையில் உள்ள ஏழை பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும், அவருக்கு உடந்தையாக போலீஸ்காரர் தேவேந்திரன்(49), ஆட்டோ ஓட்டுநர் காசி(42) ஆகியோரும் இருந்துள்ளனர். பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் அந்த வீட்டில் இருந்த 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அந்த இரண்டு இளம் பெண்களில் 20 வயதுடைய இளம்பெண் கண்மணியின் சொந்த மகள் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த சம்பவம்  அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via