சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

by Editor / 11-09-2022 02:08:45pm
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு இளைஞருக்கு  20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை


 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேல அஞ்சனம் பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் பிரசாந்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

 

Tags :

Share via