பலமாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 30-09-2022 08:30:01am
பலமாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு.

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பெரும்பாலான உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via