கத்தியுடன் வங்கியில் நுழைந்த நபர் மடக்கிய பெண் மேலாளர்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், ஜவஹர் நகர் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ளது மருதரா கிராம வங்கி இந்த வங்கிக்குள் கத்தி முனையில் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்மநபர் சனிக்கிழமை மாலை நுழைந்த வங்கி ஊழியர்களின் மொபைல்களை கொள்ளையன் பறிக்க முயற்சிக்கும் போது, அதே நேரத்தில், வங்கியின் கிளை மேலாளர் பூனம் குப்தா என்ற பெண் மேலாளர் கத்தரிக்கோலை எடுத்து, மர்மநபருடன் மோதினார், அதன் பிறகு மற்ற வங்கி ஊழியர்களும் கொள்ளையனை பிடிக்க தைரியம் காட்டினர். மேலும் சில நொடிகளில் கொள்ளையனை பிடித்தனர்.வங்கியில் கொள்ளையடிக்க முயன்று தோல்வியடைந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது தற்போது வெளியாகி உள்ளது, வங்கி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, மர்ம நபரை பிடித்தனர். தற்போது, ஸ்ரீகங்காநகர் போலீசார், மர்மநபரிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் லாவிஷ் எனப்படும் டிஷ்யூ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவனது கடந்த கால குற்ற வரலாற்றை தேடி வருகின்றனர்.
Tags :