பெண் கிடைக்காத சோகம் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 16-12-2022 04:13:59pm
பெண் கிடைக்காத சோகம் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குழித்துறை அருகே கொல்லக்குடிவிளை பகுதி யை சேர்ந்தவர் அனில் குமார். வெளி நாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் கொரோனா தொற்றுக்கு முன் ஊருக்கு வந்தவர். பின்னர் வெளி நாட்டுக்கு செல்லாமல் இப்போது ஊரில் தாயுடன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆக வில்லை.
பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவே இல்லை. இதனால் அனில்குமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நேற்று இரவு அனில் குமார் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். இன்று காலை அவரது அறை கதவு திறக்கப்பட வில்லை. இதனால் அவரது தாயார் அனில்குமாரை கதவை திறக்குமாறு அழைத்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்தபோது அனில்குமார் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். களியக்காவிளை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

 

Tags :

Share via