இந்தியாவில் அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள்..

by Editor / 17-12-2022 09:44:12pm
இந்தியாவில் அதிகரிக்கும் கொலைக்குற்றங்கள்..

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 82 பேர் கொலை செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்கள் கூறுகின்றன.இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் அதிகளவில்  கொலை சம்பவங்கள் நடக்கிறது. எண்ணிக்கை அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தில் தான் அதிக கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என்கிறது 2021ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்.

2021ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் 3,717 கொலை சம்பவங்கள் நடந்ததில் 3,825 பேர் பலியாகியுள்ளனர்.பீகாரில் 2,799 கொலை சம்பவங்களில் 2,826 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் 2,330 கொலை சம்பவங்களில் 2,381 பேரும்,மத்தியப் பிரதேசத்தில் 2,034 கொலை சம்பவங்களில் 2075பேரும் மேற்கு வங்கத்தில் 1,884 கொலை சம்பவங்களில் 1,919 பேரும் பலியாகியுள்ளனர்என்றும் 

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு 1,745 கொலை சம்பவங்களும், 2020ஆம் ஆண்டு 1,661 கொலை சம்பவங்களும், 2021ஆம் ஆண்டு 1,678 கொலை சம்பவங்களும் நடந்துள்ளது என விவரிக்கிறது குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள். 2020ஆம் ஆண்டை காட்டிலும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் கொலை சம்பவங்கள் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்  தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via