பேரறிவாளனுக்கு  30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

by Editor / 28-06-2021 03:22:17pm
பேரறிவாளனுக்கு  30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். இவர் கடந்த மாதம் ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மீண்டும் சிறைக்கு செல்ல தயாரானார்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலில் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாள் பரோல் முடிந்த நிலையில் மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டதாகவும் அவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பரோல் முடிந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்படாமல் மீண்டும் வீட்டுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Tags :

Share via

More stories