தேர்வில் தேர்ச்சி பெற படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்

by Staff / 23-12-2022 11:05:45am
தேர்வில் தேர்ச்சி பெற படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்

ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர், கிரீஷ் பர்மர் என்ற பேராசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தன்னுடன் உல்லாசத்திற்கு வரவில்லை என்றால், தேர்வில் தோல்வி அடையச் செய்வேன் என மிரட்டினார். பாதிக்கப்பட்ட மாணவி இதற்கு சம்மதம் தெரிவிக்காததால், தேர்வில் தோல்வியடைந்தார்.அதன் பிறகும் மீண்டும் அந்த பேராசிரியர் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி போலீசை அணுகினார். பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்த விசாரணையில், மற்றொரு மாணவியும் துன்புறுத்தப்பட்டது தெரிய வந்தது.

 

Tags :

Share via