திண்டிவனம் புறவழிச்சாலையில் விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் காயம்

by Staff / 08-01-2023 03:58:03pm
திண்டிவனம் புறவழிச்சாலையில் விபத்தில் சிக்கி ஐயப்ப  பக்தர்கள் காயம்

திண்டிவனம் அருகே ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் சிறுமி உட்பட 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.குரோம்பேட்டையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருபதுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் சபரிமலைக்கு ஒரு வேனில் புனித பயணம் மேற்கொண்டனர். வேன் திண்டிவனம் புறவழிச் சாலை ஆர்யாஸ் உணவகம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் எட்டு வயது சிறுமி உட்பட பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via