உடல் பாகங்கள் வெட்டப்பட்டு.. கொலை

by Staff / 16-01-2023 11:36:27am
உடல் பாகங்கள் வெட்டப்பட்டு.. கொலை

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் கொடூர கொலை ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் கொலையாளி ஒரு நபரை கொலை செய்துவிட்டு, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அவரது தலை, கால், கைகள் என தனித்தனியாக வெட்டப்பட்டு, வீசப்பட்டு இருந்தது. எலமஞ்சில்லி கோட்டபாலம் பாலத்திற்கு கீழ் உள்ளூர் மக்கள் உடல் பாகங்கள் கிடப்பதாக கடந்த ஞாயிறு அன்று அறிவித்த நிலையில், போலீசார் வந்து மற்ற பாகங்களையும் கண்டறிந்தனர். ஆனால் உடல் முழுவதும் சிதைக்கப்பட்டுவிட்டதால், இறந்தவர் யார் என்ற தகவல் தெரியவில்லை.

 

Tags :

Share via