ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு
வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இதன்படி வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு மாநிலத்தில் போதுமான அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளது. மேலும் உரிய விடுமுறை வழங்கும் முன்பு மத்திய அரசின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும், 2 ஆண்டுகள் விடுப்பில் இருந்து திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட பணியிடங்களை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி பற்றிய விவரங்களையும் கேட்டுள்ளது.
Tags :