நவீன தொழில்நுட்பத்தில் விவசாயம்

by Staff / 31-01-2023 01:11:53pm
 நவீன தொழில்நுட்பத்தில் விவசாயம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி ஊராட்சியில் உள்ள கருப்பூர், கொரகுத்தி, சங்கரன்மலைப்பட்டி, மேட்டாங்கனம், நத்தமேடு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத பற்றாக்குறை மற்றும் இதனால் ஏற்படும் நிதிச் சுமை உள்ளிட்ட காரணங்களால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விவசாயம் மேற்கொண்டு வந்தனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம். ஐ. டி விவசாய கல்லூரி மாணவர்கள் பறக்கும் இயந்திரத்தில் மூலம் கடலை, உளுந்து, பருப்பு உள்ளிட்ட பயிர்களுக்கு குறிப்பிட்ட சில மணி நேரத்தில் மருந்து தெளிக்கும் இயந்திரத்தினை விவசாயிகள் பயன்பாட்டுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தினர்.இதனால் விவசாயிகள் கூலி குறைவு மற்றும் நேரம் சேமிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via