கஞ்சா கடத்திய மூவர் கைது.
மதுரை நகரில் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் உள்ளது என்பதால் போலீசாரின் தீவிர வேட்டை தினமும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று கோச்சடை-மேலக்கால் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர். முறையான பதில் அளிக்காததால் போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர். இருசக்கர வாகனத்தில் 1. 200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதாசிவம் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, பழனி மகன் ரிஷிகேஷ்(23), அண்ணா நகர் ராமகிருஷ்ணன் மகன் பிரசன்னா(23), தாசில்தார் நகர், வ. உ. சி தெரு குதூப்முகமது மகன் முகமது ஆனஸ்(22) ஆகியோரை எஸ். எஸ். காலனி போலீசார் கைது செய்தனர்.
Tags :