மார்ச் 3 அன்று பல்லவன் விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும்-தென்னக ரயில்வே 

by Editor / 15-02-2023 10:53:36pm
மார்ச் 3 அன்று பல்லவன் விரைவு ரயில் வழக்கம் போல் இயங்கும்-தென்னக ரயில்வே 

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக மார்ச் 3 அன்று காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12605) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரயில் இயக்கங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு பயணிகளின் வசதிக்காக மார்ச் 3 அன்று காரைக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (20605) வழக்கம்போல இயங்கும் என தென்னகரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via