தொடரும் முதலைவேட்டை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே ஆழமான பகுதியில் சுமார் 11, அடி நீளம் உள்ள ராட்சத முதலை ஒன்று தங்கியிருந்து கடந்த 15 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 4 நாட்களாக அமராவதி ஆற்றில் காங்கேயம் வனச்சரகர் தனராஜ் தலைமையில் 10 பேர் அடங்கிய வனத்துறை குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது முதலை ஆற்றில் தென்படவில்லை இதனால் தேடுதல் பணியில் தொய்வடைந்தது இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags :