சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை

by Staff / 21-02-2023 12:38:10pm
சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை

சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை
சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னம் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து பிரச்சனை மேலும் தீவிரமாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பி உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலிக்கவுள்ளது. கட்சியின் சின்னம் யாருக்கு என்பது குறித்து உச்ச நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கும்.

 

Tags :

Share via