அரசு கல்லூரிமாணவர்கள் போராட்டம்.
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறையின் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் அவருக்கு வணிகவியல் பேராசிரியர் அஜித் என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே முதலமைச்சர் வரை மனுக்கள் அனுப்பியம் நடவடிக்கை இல்லை என்று கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரியை புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Tags :