கஞ்சா விற்பனை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
இராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 19.02.2023 அன்று கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த வழக்கில் இராதாபுரம், சமத்துவபுரத்தை சேர்ந்த வேலு என்பவரின் மகன் மணிகண்டன் (23), முருகேசன் என்பவரின் மகன் சுடலையாண்டி(20), பரமேஸ்வரபுரம், போஸ்ட்ஆபிஸ் தெருவை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகன் ரஞ்சித் (25) ஆகிய மூவர் மீது கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ (பொறுப்பு) குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் படி,மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :