எடப்பாடி பழனிச்சாமி செயல்படத்தடை விதிக்க வேண்டும் -மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது .
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படத்தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது . நேற்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அதிமுகவினுடைய பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தடையில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஓ பன்னீர் செல்வத்தின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் சார்பாக இந்த மனு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் தரப்பு விசாரிக்காமல் தீா்ப்புவழங்ககூடாது என்று கேபியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்
Tags :