கல்குவாரியில் உயிருடன் மண்ணில் புதைந்த டிரைவர்

by Staff / 07-05-2023 04:00:09pm
கல்குவாரியில் உயிருடன் மண்ணில் புதைந்த டிரைவர்

புதுக்கோட்டை மாவட்டம், ராக்கத்தான்பட்டி கிராமத்தில் உள்ள கல்குவாரி அமைந்துள்ளது. இந்த குவாரியில் இன்று காலை ஹிட்டாச்சி வாகனத்திலிருந்து பாறையை எடுத்துக் கொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்ததில் ஹிட்டாச்சி வாகனம் புதைந்தது. இதில் வாகனத்தின் ஓட்டுநனர் லட்சுமணன் (25) என்பவர் உள்ளே மாட்டிக்கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மண்பாறையை தோண்டி லட்சுமணனை மீட்கும் முயற்சியில் இரண்டு மணி நேரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via