கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு.

by Editor / 08-05-2023 12:19:06am
கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு.

கேரளாவில் சொகுசு படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் - பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

Tags :

Share via