நெல் மூட்டைகள் காணாமல்போன தகவல் உண்மையல்ல

by Staff / 31-05-2023 04:04:47pm
நெல் மூட்டைகள் காணாமல்போன தகவல் உண்மையல்ல

தருமபுரி திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நெல் காணாமல் போனதாக வந்த தகவல் உண்மை இல்லை என மாவட்ட ஆட்சியர் சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி, அரசு கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் நெல் மூட்டைகள் மாயமானதற்கான முதன்மைக் காரணம் அரசு நெல் கிடங்கு திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்தது தான் என்றும் கூறியுள்ளார்.

 

 

Tags :

Share via