நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட சாலை

by Staff / 01-06-2023 01:54:23pm
நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட சாலை

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. கடும் நிலச்சரிவு காரணமாக 300 பயணிகள் சிக்கினர். பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள லக்கன்பூர் அருகே லிபுலேகா-தவகாட் சாலை 100 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த சாலை திறக்கப்படும் என தெரிகிறது. மாநிலத்தின் அல்மோரா, பாகேஷ்வர், சாமோலி, சம்பவத், டேராடூன், கர்வால், ஹர்த்வார், நைனிடால், பித்தோராகர், ருத்ரபிரயாக் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via