மகளின் காதல் திருமணம்: மருமகன் வீட்டுக்கு தீ வைப்பு
மகளின் காதல் திருமணம் காரணமாக மருமகன் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. இடிகாலப்பள்ளி சர்பாஞ்ச் ரவீந்தர் மகள் காவ்யா. இவர், பிரேமா ரஞ்சித் என்ற இளைஞரை மணந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவீந்தர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரஞ்சித்தின் வீட்டை அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளார். ரஞ்சித்தின் நண்பர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் உடமைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.Tags :