கொலையில் முடிந்த பிச்சைக்காரர்கள் தகராறு

by Staff / 06-07-2023 02:49:06pm
கொலையில் முடிந்த பிச்சைக்காரர்கள் தகராறு யாசகம் பெறுபவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. கேரள மாநிலம் எர்ணாகுளம் எம்.ஜி.ரோடு ஜங்ஷன் அருகே இன்று கொலை சம்பவம் நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சாபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இவரைக் குத்திக் கொலை செய்த மட்டாஞ்சேரியைச் சேர்ந்த ரோபின் என்ற யாசகர் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சாபுவின் உடல் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக மாற்றப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via