8 மாநிலங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

by Staff / 17-07-2023 03:44:17pm
8 மாநிலங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டின் 8 மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, குஜராத் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via