முகநூல் காதலால் பாகிஸ்தான் சென்ற திருமணமான பெண்

by Admin / 25-07-2023 09:22:41pm
முகநூல் காதலால் பாகிஸ்தான் சென்ற திருமணமான பெண்


உத்தர பிரதேச கைலோர் பகுதியைச்சேர்ந்த அஞ்சு திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தாய்.இவரது கணவர்அரவிந்தனுடன் ராஜஸ்தானில் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகவழியாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவைகாதலித்து வந்துள்ளார்.இவர் அஞ்சுவை விட வயதில் இளையவர் .இருப்பினு,ம் இருவரும் முகநூல் வழியாக தங்கள்காதலை வளர்த் து வந்துள்ளனர்

.இந்நிலையில்,   அஞ்சு திடிரென  பாஸ்போர்ட்,விசா எடுத்து  பாகிஸ்தானில் உள்ளதம் காதலனைச்சந்திக்க   பாகிஸ்தான்  சென்று கைபர் பக்துனயவா மாநிலத்திலுள்ள குல்ஷோ ஊருக்குச்சென்றுள்ளார். 

அங்கு தன் காதலனைச்சந்தித்து அவர் வீட்டிலே தங்கியுள்ளார்.இச்செய்தி வேகமாக பரவியதை அடுத்து அதிகாரிகள்
அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் இருவரும் நட்பாக பழகியதாகவும் திருமணம் செய்யப்போவதில்லை என்றும்
அவர் விசா காலம் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார் என்ற விளக்கத்தை அடுத்து அதிகாரிகள் சென்றனர்

.தாயை
பிரிந்து வாடும் இருகுழந்தைகளும் அம்மாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

முகநூல் காதலால் பாகிஸ்தான் சென்ற திருமணமான பெண்
 

Tags :

Share via