பெண் சாராய வியாபாரி கைது

by Staff / 11-08-2023 02:00:10pm
பெண் சாராய வியாபாரி கைது

விழுப்புரம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி ரங்கநாயகி (வயது 40). இவர் மீது ஜெகநாதபுரம் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ரங்கநாயகியை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரங்கநாயகியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சி. பழனி உத்தரவிட்டார்.இதையடுத்து ரங்கநாயகியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via