அமைச்சர் கே.என்.நேரு மீதான நிலஅபகரிப்பு வழக்கு ரத்து!
திருச்சியில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தின் இடம் தன்னுடயது அந்த இடத்தை மிரட்டி குறைந்த விலையில் அமைச்சர் கே.என்.நேரு பறித்ததாக சீனிவாசன் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த நிலையில், புகார்தாரர் தரப்பில் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு தொடர்ந்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நிதிமன்றம் அமைச்சர் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : அமைச்சர் கே.என்.நேரு மீதான நிலஅபகரிப்பு வழக்கு