அந்தமானில் திடீர் நிலநடுக்கம்
அந்தமான் கடற்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மாலை 3.29 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்திய பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது அந்தமான் நிகோபார். யூனியன் பிரதேசமான அந்தமானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
Tags :