நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவு

by Staff / 26-09-2023 12:14:49pm
நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவு

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் 29ஆம் தேதி விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் 2011ஆம் அண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி அறிவித்துவிட்டு, பெங்களூருர் சென்றார்.

 

Tags :

Share via