பொது இடத்தில் ரகளை செய்த 3 பேர் கைது

by Staff / 27-09-2023 04:55:41pm
பொது இடத்தில் ரகளை செய்த 3 பேர் கைது

புதுவை மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில்  2 வாலிபர்கள் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை கேலி செய்து ரகளை செய்து கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்து விரைந்து சென்று அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்த வேங்கடேசன் வயது 35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இது போல் முதலியார் பேட்டை ஆலை ரோடு பகுதியில் மது குடித்து விட்டு ரகளை செய்த பக்கிரி பாளையத்தை சேர்ந்த வசந்த் (21) என்பவரை முதலியார் பேட்டை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via