செல்போன் எடுத்துச் செல்ல தடை இன்று முதல் அமலுக்கு வந்தது

by Editor / 01-10-2023 10:26:58am
செல்போன் எடுத்துச் செல்ல தடை இன்று முதல் அமலுக்கு வந்தது

திண்டுக்கல், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. வீடியோ, புகைப்பட கருவிகளை பழனி மலை கோயிலுக்கு எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. மலை அடிவாரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் செல்போன்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதவிநாயகர் கோயில், ரோப் கார், ரயில் நிலைய பகுதிகளில் அமைக்கப்பட்ட அறைகளில் செல்போனை வைக்கலாம். பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவை வைக்க ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : செல்போன் எடுத்துச் செல்ல தடை இன்று முதல் அமலுக்கு வந்தது

Share via