பேருந்து விபத்து - அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 01-10-2023 01:10:26pm
பேருந்து விபத்து - அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீலகிரி, குன்னூர் மரப்பாலம் அருகே நேற்று (செப்.30) சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், குன்னூர் பேருந்து விபத்தில் பலியான 9 பேரின் உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via