மின்சாரம் தாக்கி கர்ப்பிணிபெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக கனமழை பெய்துவரவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளுக்கு 2 வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்த சேம் என்பவரின் வீட்டின் தகர மேற்கூரையில் மின்வயர் அறுந்து விழுந்துள்ளது. இதனையறியாமல் அவரது மகன் அஸ்வின் இரும்பு கம்பியால் தகர மேற்கூரையை நகர்த்தியுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு தாய் ஜெயசித்ரா, சகோதரி 8 மாத ஆதிரா (கர்ப்பிணி) ஆகியோர் காப்பற்ற முயன்ற போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் இவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Tags : மின்சாரம் தாக்கி கர்ப்பிணிபெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி