வகுப்பறையில் மாணவி தற்கொலை

by Staff / 11-10-2023 04:04:10pm
வகுப்பறையில் மாணவி தற்கொலை

சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளி அறையிலே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தூர் அருகே அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவந்த மேகவர்தினி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் மாணவியை சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via