குலசேகரப்பட்டினத்தில் பெண் குழந்தை கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடந்து வரும் நிலையில், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி குழந்தை கடத்தல் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவில் பொருட்களை விற்க வந்த நாடோடி பழங்குடியின பெண்ணின் 2 வயது பெண் குழந்தையை மர்ம ஆசாமி கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். கடந்த வாரம் திருச்செந்தூர் கோவிலில் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டிருந்தனர்.
Tags :