உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் இரங்கல்

by Editor / 30-10-2023 08:42:37am
உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் இரங்கல்

ஆந்திராவின் விஜயநகர மாவட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகில் நேற்று இரவு நேருக்கு நேர் இரண்டு ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடந்த விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மருத்துவம், காவல்துறை, வருவாய்த்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் இரங்கல்

Share via