வால்பாறையில் யானைகள் பள்ளிக்கூட கட்டிடங்களை உடைத்து சேதம்

by Staff / 08-11-2023 04:07:20pm
வால்பாறையில் யானைகள் பள்ளிக்கூட கட்டிடங்களை உடைத்து சேதம்

கோவை மாவட்டம் வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல் பட்டுவருகிறது.இப்பள்ளியில் 7 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர் இங்கு நேற்று இரவு  கூட்டமாக வந்த காட்டு யானைகள் மற்றும் அதன் குட்டிகளுடன் வந்து மேற்படி பள்ளி கதவு ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற யானைகள் அங்குள்ள மேஜை பீரோ நார்காலி, கணினி மற்றும் அனைத்து ரெகார்டு களையும்  உடைத்து முற்றிலும் சேதப்படுத்தி உள்ளது மற்றும் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கிலிரோடு பள்ளியையும் சேத படுத்தி உள்ளது.காட்டு யானைகள் கூட்டம் கூட்டம்மாக பச்சை மலை மற்றும் பண்ணிமெடு குரங்குமுடி ,நள்ளமுடி, கெஜமுடி ஆகிய பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளது இரவு நேரங்களில் யானைகள் ரேஷன் கடை,குடியிருப்பு, பள்ளிகளை சேதப்படுத்தி வருகிறதுஇதனை அறிந்து வந்த வணத்துறையினர்  யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via