200 சட்டமன்ற தொகுதியில் 737 பேர் சுயேச்சைகள் உள்ளிட்ட 1,875 வேட்பாளர்கள் போட்டி.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி 200 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வேட்புமனுக்கள் முடிந்த நிலையில் அங்கு 1,875 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 737 பேர் சுயேச்சைகள். பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் 199 இடங்களிலும், பிஎஸ்பி கட்சிசார்பில் 185 இடங்களிலும்,ஆர்எல்பி கட்சிசார்பில் 78 இடங்களிலும் போட்டியிடுகின்றனர், ஜோத்வாடா தொகுதியில் அதிகபட்சமாக 18 பேர் போட்டியிடுகின்றனர்.
Tags : 200 சட்டமன்ற தொகுதியில் 737 பேர் சுயேச்சைகள் உள்ளிட்ட 1,875 வேட்பாளர்கள் போட்டி.