பணமோசடிமூன்று பேருக்கு வலைவீச்சு..

by Staff / 18-11-2023 04:44:45pm
பணமோசடிமூன்று பேருக்கு  வலைவீச்சு..

சென்னை கோவில்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி, 26. இவர், அதே பகுதியில் ஜே. கே. டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.கடந்த 2021ல் வியாபார விருத்திக்காக பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா என்பவரிடம், 2 லட்ச ரூபாய் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார்.அப்போது சதீஷ், தனசேகர் ஆகியோரை ரமணிக்கு அறிமுகம் செய்து வைத்த பூர்ணிமா, தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கியில் கடன் பெற்று தருவர் என தெரிவித்துள்ளார். சதீஷ், தனசேகர் ஆகியோர், ரமணியிடம் ஆவணங்களைப் பெற்று தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளனர்.ரமணி மாதந்தோறும் தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன், வங்கி ஊழியர்கள் ரமணி வீட்டிற்கு வந்து, வங்கியில் வாங்கிய 10 லட்சம் கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை சரியாக கட்டவில்லை.அதற்கான அபராத கட்டணத்தை செலுத்த வேண்டும். இனி, மாதந்தோறும் தவணை தொகையை சரியான தேதியில் கட்ட வேண்டும் எனக் கூறி உள்ளனர். சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், ரமணியிடம் பெற்ற ஆவணங்களை வைத்து பூர்ணிமா, சதீஷ், தனசேகர் ஆகிய மூவரும்ரமணி பெயரில் 10 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via