ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி

by Staff / 20-11-2023 12:07:01pm
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி

மறைமுக விலை உயர்வு; தனியாருக்கு சாதகம் ஆகிவிடும் என்பதால் ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை 25ஆம் தேதியுடன் நிறுத்தவும், 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via