இழப்பீடு பெற மனைவி, மகளை கொன்ற நபர் கைது

by Staff / 25-11-2023 12:56:27pm
இழப்பீடு பெற மனைவி, மகளை கொன்ற நபர் கைது

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் மனைவி, 2 வயது மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்துக் கொன்ற கணேஷ் பத்ரா (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பாம்புக்கடியால் உயிரிழந்தவர்களுக்கு அரசிடம் இருந்து ரூ.8 லட்சம் இழப்பீடு பெறுவதற்காக இப்படி செய்திருக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். கணேஷ் பத்ரா மீது வரதட்சனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via