9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்

by Staff / 01-12-2023 12:16:46pm
9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை மறுநாள் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via