வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு: ஓபிஎஸ் கோரிக்கை
வெள்ளத் தடுப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாமல், மக்கள் வரிப் பணத்தை வீணடித்துள்ளதாக திமுக அரசிற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புயல் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி, மக்களுக்குத் தேவையான மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள போர்க்கால அடிப்படையிவ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரங்களுக்கு மக்கள் ஆளாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :