இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்: குருபத்வந்த்
டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் இந்திய நாடாளுமன்றத்தை தாக்குவோம் என காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பனூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து சரியாக 22 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தப்போவதாக குருபத்வந்த் எச்சரிக்கை விடுத்தார். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். டெல்லி காலிஸ்தானாக மாறும் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளதால், டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags :