அரசியல் சாயம் பூசுகிறார் அண்ணாமலை அமைச்சர் சேகர் பாபு
சந்தர்ப்ப சூழலை பயன்படுத்தி நடக்கும் பிரச்னையை வைத்து அண்ணாமலை அரசியல் சாயம் பூசி வருகிறார் என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "மழை பிரச்னையை வைத்து அண்ணாமலை அரசியல் செய்யலாம் என நினைத்தார். அது நடக்காததால் தற்போது ஸ்ரீரங்கம் பிரச்னையை கையில் எடுத்துள்ளார். ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கும், பாதுகாவலர்களும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சுமூகமான தீர்வு காணப்படும்" என்றார்.
Tags :