கோவா விமான நிலைய விவாகரம்: முதல்வர் கண்டனம்..

by Staff / 14-12-2023 02:58:44pm
கோவா விமான நிலைய விவாகரம்: முதல்வர் கண்டனம்..

 கோவா விமான நிலையத்தில் பெண் பயணி மிரட்டப் பட்ட சம்பவத்திற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories