மனைவியை பிளேடால் கிழித்த கணவன் கைது

by Staff / 10-01-2024 12:07:41pm
மனைவியை பிளேடால் கிழித்த கணவன் கைது

செங்கல்பட்டு: மறைமலை நகர் பொத்தேரியைச் சேர்ந்தவர் அபிஷேக் (25). இவருக்கும் தமிழ்விழி (23) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ்விழி தன் தாயார் வீட்டில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 4ஆம் தேதி, தமிழ்விழி வேலைக்கு சென்றபோது, அவரை வழிமறித்த அபிஷேக், தன்னுடன் சேர்ந்து வாழும்படி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென அபிஷேக் பிளேடால், தமிழ்விழியின் கை, கால், தொடை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். அக்கம் பக்கத்தினர் தமிழ்விழியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அபிஷேக்கை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via