பா ஜ வின் தேர்தல் நாடகம் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

by Staff / 01-02-2024 02:03:20pm
பா ஜ வின்  தேர்தல் நாடகம் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: -          திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குமரி மாவட்டத்தில் உள்ள குவாரிகள் தடை செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம்  தலையிட்டு உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் மாவட்டத்தில் தற்போது  7 குவாரிகள் செயல்படுகிறது.           குமரி வழியாக செல்லும் அதி கனரக வாகனங்களை தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக லாரி  உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் தான் அரசாணைக்கு நீதிமன்றம்  தடை விதித்தது.        இந்த விவகரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தரப்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய நேரடியாக கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கு பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முன் வரவில்லை.   அரசாணைக்கு எதிராக மீண்டும் நீதிபதி தடைவித்துள்ளார்.        இந்த விவகாரத்தில் முழு முதல் குற்றவாளி பாரதிய ஜனதா கட்சி தான். அரசியல் நாடக நடத்தி உண்மையை மறைத்து, தங்கள் மீது உள்ள குற்றத்தை மற்றவர்கள் மீது திணிக்கின்றனர்.   தேர்தல் நேர கபட நாடகத்தை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.   இவ்வாறு அவர் கூறினார்

 

Tags :

Share via